ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
விஜய் டிவியின் 'செந்தூரப்பூவே' தொடரின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியானார் ஸ்ரீநிதி. நன்றாக சென்று கொண்டிருந்த அந்த தொடரானது பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக முதலில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து மீண்டும் ஒளிபரப்பாக ஆரம்பித்த போது மக்கள் மத்தியில் அந்த தொடருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அந்த சீரியல் முடித்து வைக்கப்பட்டது. அதேசமயம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியிருந்த ஸ்ரீநிதிக்கு விஜய் டிவியிலேயே புதிய சீரியலில் வாய்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குபிறகு வந்த புது சீரியல்களில் கூட வேறு ஹீரோயின்களே கமிட்டாகியிருந்தனர்.
இந்நிலையில் தான் ஸ்ரீநிதி ஜீ தமிழ் நிகழ்ச்சிக்கு தாவினார். இப்போது அந்த சேனலின் பிரபல நடன நிகழ்ச்சியில் கலக்கி கொண்டிருக்கிறார். இதனையடுத்து ஸ்ரீநிதி தற்போது அதே சேனலில் மிக விரைவில் வெளியாகவுள்ள 'தெய்வம் தந்த பூவே' தொடரின் சீசன் 2 வில் ஹீரோயினாக நடிக்கிறார். முன்னதாக முதல் சீசனில் நிஷ்மா செங்கப்பா ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி மாற்றப்பட்டுள்ளார்.