அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
ஹிந்தியில் 'பவால்', 'சிச்சோரே' ஆகிய படங்களை இயக்கிய நிதிஷ் திவாரி, தற்போது 'ராமாயணா' எனும் படத்தை இயக்கி வருகிறார். அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் நடிக்கின்றனர். அதேபோல், அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், சூர்ப்பனகை வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும், கைகேயியாக லாரா தத்தாவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தை 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்த படத்தில் சீதாவாக நடிப்பதற்கான ஆடிஷனில் முதலில் 'கேஜிஎப்' படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி பங்கேற்றிருந்தார். ஆனால், ஆடிஷனில் அவர் தேர்வாகவில்லை; அவருக்கு பதிலாக சாய் பல்லவி சீதாவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு நழுவிய வாய்ப்பு குறித்து ஸ்ரீநிதி ஷெட்டி கூறியதாவது: ராமாயணா படத்தில் சீதா வேடத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்றிருந்தேன். 3 காட்சிகளை நடித்துக்காட்ட சொன்னார்கள். என் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது.
அடுத்த ஓரிரு மாதங்களில் கேஜிஎப் படம் வெளியானது. அதில் யஷ் ஜோடியாக நடித்திருந்த நிலையில், ராமாயணா படத்தில் யஷ் ராவணனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ராவணனாக யஷூம், சீதாவாக நானும் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதற்காக படக்குழுவினர் எனக்கு வாய்ப்பளிக்காமல் விட்டிருக்கலாம். அதன்பிறகு, சீதாவாக சாய் பல்லவி தேர்வானதாக கூறப்பட்டது. அந்த கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி நல்ல சாய்ஸ் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.