ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் அண்மையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகினர். இதுகுறித்து சோஷியல் மீடியாக்களில் பலவித விவாதங்கள் எழுந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் அது உரிய சட்டமுறை விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரணை கமிஷன் அளவுக்கு இந்த விஷயம் பேசு பொருளாகி உள்ளது. நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகை வனிதா சமீபத்தில் ‛‛பெற்றோர்களுக்கு தங்கள் அழகான குழந்தைகளின் பிறப்பை விட அழகான தருணம் என்ன இருக்க முடியும். ஒருவர் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களை கெடுப்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். லீகல் தெரியும், மருத்துவம் தெரியுமென்று சில கோமாளிகள் பேட்டி கொடுப்பதும், ட்வீட் போடுவதும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?'' என பதிவிட்டிருந்தார்.
அவரை போலவே நடிகை ரேஷ்மா பசுபலேட்டியும், 'இந்த உலகில் அடுத்தவர்களின் சந்தோஷத்தை பார்த்து சந்தோஷப்படுவபர்கள் இல்லாமல் போய்விட்டனர். குற்றம் சொல்வது, யூகித்துக் கொள்வது, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பமடைவது இதுதான் தற்போது இந்த கொடூர உலகில் நடந்து கொண்டிருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.




