விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
பரத், வாணி போஜன் இணைந்து நடித்துள்ள படம் மிரள். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.டில்லி பாபு படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி பேனரில் தயாரித்துள்ளார், சக்தி பிலிம் பேக்டரி இந்த படத்தை வெளியிடுகிறது. எம்.சக்திவேல் இந்த படத்தை இயக்கியுள்ளார். பிரசாத், இசையமைத்துள்ளார். சுரேஷ்பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: பரத்தும், வாணி போஜனும் கணவன், மனைவி, அவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சென்னையில் வாழும் அவர்களுக்கு பல்வேறு நெருக்கடிகள் இருக்கிறது. இதனால் குல தெய்வ கோவிலில் பூஜை செய்து வழிபடுவதற்காக தென்காசிக்கு வருகிறர்கள். பூஜை முடிந்து அந்த பகுதியில் கள்ள காற்றாலை வழியாக இரவு நேரத்தில் திரும்புகிறார்கள்-. அப்போது அவர்களுக்கு ஏற்படும் திரிலான அனுபவங்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
இதுவரை காற்றாலை பின்னணியில் எந்த படமும் வந்தில்லை. 24 நாள் வரை காற்றாலை பகுதியிலேயே படப்பிடிப்பு நடந்தது. 150 அடி உயரத்தில் காற்றாலை செட் போட்டு படமாக்கினோம். வித்தியாசமான த்ரிலர்லர் அனுபவமாக படம் இருக்கும். என்றார்.