ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2013-ல் வெளியான கடல் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அடியே என்கிற பாடலை பாடி பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம். அதைத்தொடர்ந்து மறுவார்த்தை பேசாதே, உன் கூடவே பிறக்கணும் என்பது போன்று ரசிகர்களின் மனம் உருகக்கூடிய பாடல்களை தனித்துவமான குரலால் பாடி கவர்ந்த சித் ஸ்ரீராம், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியிலும் என ஐந்து மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். வானம் கொட்டட்டும் என்கிற படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். இந்த நிலையில் முதன்முறையாக மராத்திய படம் ஒன்றில் பாடல் பாடியுள்ளார் ஸ்ரீராம்.
மராத்திய மொழியில் உருவாகியுள்ள ஹர ஹர மகாதேவ் என்கிற படத்தில் வாரே சிவா என்கிற பாடலை பாடியுள்ளார் சித் ஸ்ரீராம். அபிஜித் தேஷ்பாண்டே என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஹிதேஷ் மோடாக் என்பவர் இசையமைத்துள்ளார். வரும் அக்டோபர் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. மராத்தி மட்டும் அல்லது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் வெளியாகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சித் ஸ்ரீராம் மராத்திய மொழியில் எனது அறிமுகத்திற்கு இதைவிட ஒரு அருமையான பாடல் கிடைத்திருக்காது என்ற தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.