தனக்காக கட்டிய கல்லறையில் நடிகர் ராஜேஷ் உடல் அடக்கம் | தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் மீது நடிகை சுர்வீன் சாவ்லா குற்றச்சாட்டு | ஒரு வழியாக வெளியானது 'லால் சலாம்' ஓடிடி அறிவிப்பு? | தெலுங்கானா முதல்வரை சந்தித்து அழைப்பிதழ் தந்த நாகார்ஜுனா, அமலா | சின்மயி Vs தீ, தேவையற்ற சர்ச்சை - மணிரத்னம் கோபம் ? | சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ? | பிளாஷ்பேக்: 'வேலைக்காரி'யின் சாதனைகள் | திருமலைக்குமாரசாமி கோவிலில் மோகன்லால் தங்க வேல் செலுத்தி தரிசனம் | அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது | கமல்ஹாசனை பயன்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சி நடக்கிறது : நடிகர் சங்கம் அறிக்கை |
மயக்கும் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பாடகரும், இசையமைப்பாளருமான சித்ஸ்ரீராம். தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வரும் இவர் கோவையில் நாளை(நவ., 27) பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6மணிக்கு நிகழ்ச்சி துவங்கி சுமார் 3மணி நேரம் நடைபெற உள்ளது. சித்ஸ்ரீராமுடன் அவரின் இசை குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீராம் உரையாடல் இடம் பெற உள்ளது.
ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளது. இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி ஆடும் 'பேன் பிட்' இடம்பெறுகிறது. சுமார் 10,000 பேர் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அன்னபூர்ணா மசாலா இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது. மேலும் அருண் ஈவென்ட்ஸ், வி 2 கிரியேஷன்ஸ் மற்றும் வீ.எம்.ஆர் குரோபக்ஸ் ஆகியோருடன் தினமலர் நாளிதழும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குகிறார்கள்.
கோவை மக்களே சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தயாரா... அப்புறமென்ன கிளம்புங்கள்... இன்னும் டிக்கெட் புக் செய்யாதவர்கள், உடனே Bookmyshow மற்றும் PayTm Insider ஆகிய தளங்களில் இந்த நிகழ்ச்சிக்குக்கான டிக்கெட்டுகள் பெறுங்கள்.