எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
மயக்கும் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் பாடகரும், இசையமைப்பாளருமான சித்ஸ்ரீராம். தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வரும் இவர் கோவையில் நாளை(நவ., 27) பிரமாண்ட இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். கோவை கொடிசியா மைதானத்தில் மாலை 6மணிக்கு நிகழ்ச்சி துவங்கி சுமார் 3மணி நேரம் நடைபெற உள்ளது. சித்ஸ்ரீராமுடன் அவரின் இசை குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். நிகழ்ச்சியின் இடையே ரசிகர்களுடன் சித்ஸ்ரீராம் உரையாடல் இடம் பெற உள்ளது.
ஒளி மற்றும் ஒலி ஆகியவற்றின் தரம் சர்வதேச நிகழ்வுகளுக்கு சமமானதாக இருக்க வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆடியோ சிஸ்டம், லைட் சிஸ்டம் இந்த கச்சேரியில் உபயோகிக்கப்பட உள்ளது. இம்முறை மேடை அருகே ரசிகர்கள் நின்று பாடி ஆடும் 'பேன் பிட்' இடம்பெறுகிறது. சுமார் 10,000 பேர் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அன்னபூர்ணா மசாலா இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது. மேலும் அருண் ஈவென்ட்ஸ், வி 2 கிரியேஷன்ஸ் மற்றும் வீ.எம்.ஆர் குரோபக்ஸ் ஆகியோருடன் தினமலர் நாளிதழும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குகிறார்கள்.
கோவை மக்களே சித்ஸ்ரீராமின் இன்னிசை மழையில் நனைய தயாரா... அப்புறமென்ன கிளம்புங்கள்... இன்னும் டிக்கெட் புக் செய்யாதவர்கள், உடனே Bookmyshow மற்றும் PayTm Insider ஆகிய தளங்களில் இந்த நிகழ்ச்சிக்குக்கான டிக்கெட்டுகள் பெறுங்கள்.