மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

'நேரம், பிரேமம்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அப்படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அவர் இயக்கியுள்ள 'கோல்டு' படம் அடுத்த வாரம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
ஓணம் பண்டிகையின் போதே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தைத் தள்ளி வைத்திருந்தார்கள். நயன்தாரா தமிழில் நம்பர் 1 நடிகையாக இருப்பதால் படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. கேரளாவில் கால்பந்து போட்டிகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. பலரும் தற்போது உலகக் கால்பந்து போட்டிகளில் பிஸியாக இருப்பதால் மலையாள ரசிகர்கள் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது படம் வெளியானால்தான் தெரியும்.




