பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
'நேரம், பிரேமம்' படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அப்படத்திற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அவர் இயக்கியுள்ள 'கோல்டு' படம் அடுத்த வாரம் டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள்.
ஓணம் பண்டிகையின் போதே படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், இறுதிக்கட்டப் பணிகள் முடிவடையாத காரணத்தால் படத்தைத் தள்ளி வைத்திருந்தார்கள். நயன்தாரா தமிழில் நம்பர் 1 நடிகையாக இருப்பதால் படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
தற்போது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. கேரளாவில் கால்பந்து போட்டிகளுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. பலரும் தற்போது உலகக் கால்பந்து போட்டிகளில் பிஸியாக இருப்பதால் மலையாள ரசிகர்கள் இந்தப் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பைக் கொடுக்கப் போகிறார்கள் என்பது படம் வெளியானால்தான் தெரியும்.