பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்த்தி ஷெட்டி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், அவர் கைவசம், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, வா வாத்தியார், ஜீனி' படங்கள் உள்ளன.
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கிர்த்தி ஷெட்டி பேசுகையில், ''கோவையின் கலாசாரமும் பாரம்பரியமும், கோவையில் பேசப்படும் தமிழும் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் தன்னை நெகிழ வைத்தன. நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவை தருவார்கள் என நம்புகிறேன்'' எனப் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.