ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்த்தி ஷெட்டி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், அவர் கைவசம், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, வா வாத்தியார், ஜீனி' படங்கள் உள்ளன.
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கிர்த்தி ஷெட்டி பேசுகையில், ''கோவையின் கலாசாரமும் பாரம்பரியமும், கோவையில் பேசப்படும் தமிழும் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் தன்னை நெகிழ வைத்தன. நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவை தருவார்கள் என நம்புகிறேன்'' எனப் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.




