தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தெலுங்கில் வெளியான 'உப்பென்னா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கிர்த்தி ஷெட்டி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில், அவர் கைவசம், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, வா வாத்தியார், ஜீனி' படங்கள் உள்ளன.
இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கிர்த்தி ஷெட்டி பேசுகையில், ''கோவையின் கலாசாரமும் பாரம்பரியமும், கோவையில் பேசப்படும் தமிழும் எனக்கு மிகவும் பிடிக்கும். இங்கு கிடைத்த அன்பும் வரவேற்பும் தன்னை நெகிழ வைத்தன. நான் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். அந்தப் படங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவை தருவார்கள் என நம்புகிறேன்'' எனப் பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது.