ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

சினிமா பாடலாசிரியரான சினேகனுக்கும் சின்னத்திரை நடிகை ஜெயலெட்சுமிக்கும் இடையே சமீபத்தில் சினேகம் அறக்கட்டளை தொடர்பான விவகாரத்தில் பிரச்னை எழுந்தது. இதனையடுத்து அறக்கட்டளையின் மூலம் பணம் மோசடி செய்ததாக கூறி ஜெயலெட்சுமி மீது சினேகன் புகார் கொடுத்தார். பதிலுக்கு அது பொய்யான குற்றச்சாட்டு என ஜெயலெட்சுமியும் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் இருவரையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலெட்சுமி சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். அப்போது, 'சினேகம் அறக்கட்டளை மூலம் பணமோசடி செய்ததாக சினேகன் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார். மேலும், இது தொடர்பில் அவர் என்னிடம் பேச வந்தபோது அவரை நான் தனிமையில் காபி சாப்பிட அழைத்ததாகவும் பொய் கூறி வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனவே, நீதி வேண்டி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். தற்போது என் மீது பொய் புகார் அளித்ததற்காகவும், அவதூறாக பேசியதற்காகவும் சினேகன் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது சமூகவலைத்தளத்தில் என்னை பற்றி அவதூறாக பேசி வரும் அனைவருக்கும் பொருந்தும்' என்றும் ஜெயலெட்சுமி கூறியுள்ளார்.