கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி, இன்று (செப்.,25) சென்னையில் நடக்கிறது. இதற்காக 'எனது இதய வீணை' என்ற தலைப்பில், மாலை 6:30 மணியளவில், சென்னை, தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சியில், எஸ்.பி.பி.,யின் பழைய, புதிய என்று பிரபலமான பல பாடல்கள் பாடப்பட இருக்கிறது. ராஜேஷ் வைத்யாவுடன் பிரபலமான பல இசைக்கலைஞர்கள் கைகோர்த்து, நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.
ராஜேஷ் வைத்யா எனும் வீணைச்சக்ரவர்த்தி தன் மாயவிரல்களால், ஆசை வீணையின் தந்திகளை மீட்டி, அமரரான எஸ்.பி.பி.,யை மகிழ்ச்சிப்படுத்த இருக்கிறார். அந்த மகிழ்ச்சி அலையில் நீங்களும் நனையலாம். இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதி கட்டணம் உண்டு. மேலும் விபரங்களுக்கு 9884152200 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழும் இணைந்து வழங்குகிறது.