பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் |
மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி, இன்று (செப்.,25) சென்னையில் நடக்கிறது. இதற்காக 'எனது இதய வீணை' என்ற தலைப்பில், மாலை 6:30 மணியளவில், சென்னை, தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சியில், எஸ்.பி.பி.,யின் பழைய, புதிய என்று பிரபலமான பல பாடல்கள் பாடப்பட இருக்கிறது. ராஜேஷ் வைத்யாவுடன் பிரபலமான பல இசைக்கலைஞர்கள் கைகோர்த்து, நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.
ராஜேஷ் வைத்யா எனும் வீணைச்சக்ரவர்த்தி தன் மாயவிரல்களால், ஆசை வீணையின் தந்திகளை மீட்டி, அமரரான எஸ்.பி.பி.,யை மகிழ்ச்சிப்படுத்த இருக்கிறார். அந்த மகிழ்ச்சி அலையில் நீங்களும் நனையலாம். இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதி கட்டணம் உண்டு. மேலும் விபரங்களுக்கு 9884152200 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழும் இணைந்து வழங்குகிறது.