என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |
மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிரபல வீணை இசைக்கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசை நிகழ்ச்சி, இன்று (செப்.,25) சென்னையில் நடக்கிறது. இதற்காக 'எனது இதய வீணை' என்ற தலைப்பில், மாலை 6:30 மணியளவில், சென்னை, தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நிகழ்ச்சி நடத்துகிறார். நிகழ்ச்சியில், எஸ்.பி.பி.,யின் பழைய, புதிய என்று பிரபலமான பல பாடல்கள் பாடப்பட இருக்கிறது. ராஜேஷ் வைத்யாவுடன் பிரபலமான பல இசைக்கலைஞர்கள் கைகோர்த்து, நிகழ்வை சிறப்பிக்க உள்ளனர்.
ராஜேஷ் வைத்யா எனும் வீணைச்சக்ரவர்த்தி தன் மாயவிரல்களால், ஆசை வீணையின் தந்திகளை மீட்டி, அமரரான எஸ்.பி.பி.,யை மகிழ்ச்சிப்படுத்த இருக்கிறார். அந்த மகிழ்ச்சி அலையில் நீங்களும் நனையலாம். இந்த நிகழ்ச்சிக்கு, அனுமதி கட்டணம் உண்டு. மேலும் விபரங்களுக்கு 9884152200 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழும் இணைந்து வழங்குகிறது.