தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படம் ‛பொன்னியின் செல்வன்'. அமரர் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக படமாக இயக்கி, லைகா உடன் இணைந்து தயாரித்துள்ளார் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், கிஷோர், ரகுமான் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முதல்பாகம் செப்.30ல் வெளியாக உள்ளது. இதற்காக பல்வேறு ஊர்களில் படக்குழுவினர் புரொமோஷன் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்று வந்துள்ளது. படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்று அளித்துள்ளனர். அதோடு படம் 2 மணிநேரம் 47 நிமிடம் ஓடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.