அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படம் ‛பொன்னியின் செல்வன்'. அமரர் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக படமாக இயக்கி, லைகா உடன் இணைந்து தயாரித்துள்ளார் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், கிஷோர், ரகுமான் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முதல்பாகம் செப்.30ல் வெளியாக உள்ளது. இதற்காக பல்வேறு ஊர்களில் படக்குழுவினர் புரொமோஷன் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்று வந்துள்ளது. படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்று அளித்துள்ளனர். அதோடு படம் 2 மணிநேரம் 47 நிமிடம் ஓடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.