பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அங்கமாலி டைரீஸ், படத்தின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தான் இயக்கிய அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களை கையாண்டிருந்த லிஜோ ஜோஸ் பள்ளிசேரி ரொம்பவே எதார்த்தமாக தனது படங்களை கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் இவரது இயக்கத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மம்முட்டி வெகு சாதாரணமான ஒரு கிராமத்து மனிதன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மம்முட்டி அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தற்போது மலையாள திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வமாக இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படாவிட்டாலும் நிச்சயமாக சில நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்துவரும் ராம் படத்தை முடித்த பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.