தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் தாயாரும் பிரபல சீனியர் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் தற்போது முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் தனது புதிய கணக்கை துவங்கியுள்ளார். அதில் “டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி.. முதல் படமாக எனது அன்பு மகன் விஜய் உடன் இருக்கும் புகைப்படம்” என்று கூறி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ஷோபா சந்திரசேகர்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஷோபா சந்திரசேகர் இயக்குனராகவும் மாறி சில படங்களை இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயத்தில் அதை பக்குவமாக கையாண்ட ஷோபா சந்திரசேகர், இப்போது டுவிட்டரில் நுழைந்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் எழுப்பி உள்ளது.