'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய்யின் தாயாரும் பிரபல சீனியர் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகர் தற்போது முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் தனது புதிய கணக்கை துவங்கியுள்ளார். அதில் “டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி.. முதல் படமாக எனது அன்பு மகன் விஜய் உடன் இருக்கும் புகைப்படம்” என்று கூறி விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ஷோபா சந்திரசேகர்.
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமான ஷோபா சந்திரசேகர் இயக்குனராகவும் மாறி சில படங்களை இயக்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட சமயத்தில் அதை பக்குவமாக கையாண்ட ஷோபா சந்திரசேகர், இப்போது டுவிட்டரில் நுழைந்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் எழுப்பி உள்ளது.