நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிக்கும் சூர்யாவின் 42வது படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் 3டி டெக்னாலஜியில் 10 மொழிகளில் இப்படம் உருவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சரித்திர கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமரத்தார் ஆகிய கேரக்டர்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோஷன் போஸ்டரை வைத்து பார்க்கும்போது இப்படம் மிகப்பெரிய தொழில்நுட்பத்துடன் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பது தெரிகிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.