ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய்க்கு முதன் முதலாக தான் தமிழில் டப்பிங் கொடுத்திருப்பதாக நடிகை தீபா வெங்கட் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்து இருக்கிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி, என தெரிவித்துள்ளார் தீபா வெங்கட்.




