சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா! | வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா? | ரேட்டிங்கிற்குத் தடை வாங்கிய சிரஞ்சீவி படத் தயாரிப்பாளர் | தமன்னா கீ ரோலில் நடித்துள்ள 'ஓ ரோமியோ' ஹிந்தி படம் பிப்.,13ல் ரிலீஸ்! | ஜனவரி 15ல் திரைக்கு வரும் 'திரௌபதி- 2' படத்தின் டிரைலர் வெளியானது! | 'டாக்சிக்' படத்தில் நடிக்க 15 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா? | நடிகைக்கு ஷாக் கொடுத்த டிராகன் நடிகர் | கணவர் நடிகருடன் மல்லுக்கு நிற்கும் மனைவி நடிகை | ரஜினி வசனமும் நானும்! கண்ணா ரவியின் மகிழ்ச்சி | பிளாஷ்பேக்: அரசியல் நய்யாண்டி திரைப்படங்களின் ஆணிவேர் “முகமது பின் துக்ளக்” |

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் வருகிற 30ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி என்ற வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யாராய்க்கு முதன் முதலாக தான் தமிழில் டப்பிங் கொடுத்திருப்பதாக நடிகை தீபா வெங்கட் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அது குறித்து அவர் கூறுகையில், மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுத்து இருக்கிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி, என தெரிவித்துள்ளார் தீபா வெங்கட்.




