விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
சீரியல் ஷூட்டிங்கின் போது தீ விபத்திலிருந்து மயிரிழையில் தப்பி இருக்கிறார் நடிகர் ஸ்ரீகுமார். 'வானத்தைப் போல' தொடரில் நாயகனாக ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். இந்த தொடரானது நடிகர்கள் மாற்றத்தால் சில சறுக்கல்களை சந்தித்தாலும் இப்போது சூடுபிடிக்க தொடங்கி டிஆர்பியில் முன்னேறி வருகிறது.
இந்நிலையில், கொம்பன் படத்தில் ராஜ்கிரண் சாமியாடி வரும் ட்ராக்கை போல இதிலும் ஒரு எபிசோடை காட்சியாக்கி உள்ளனர். அதில், ஸ்ரீகுமார் கருப்பசாமி வந்து ஆக்ரோஷமாக நடந்து வரும் காட்சிகளும், எதிரிகளுடன் சண்டையிடும் காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டது. அப்போது ஸ்ரீகுமார் தனது கைகளில் இருந்த தீப்பந்ததால் பைட்டர் ஒருவரை அடிக்க, தீப்பந்தம் சிதறி ஸ்ரீகுமாரின் காலின் அருகே விழுகிறது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஸ்ரீகுமார், பந்தத்தை தன் கால்களால் உடைத்து தள்ளுகிறார். இல்லையெனில் கண்டிப்பாக அவர் ஆடையில் தீப்பிடித்து பெரிய விபத்தாக மாறியிருக்கும். ஒருவழியாக அந்த விபத்திலிருந்து ஸ்ரீகுமார் அதிக பாதிப்பு இல்லாமல் தப்பித்துவிட்டார். இந்த வீடியோவானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதேப்போல தி.நகரின் ஒரு பிரபல கடையில் தீ விபத்து ஏற்பட்ட போது ஸ்ரீகுமார் தனது குடும்பத்துடன் மாட்டிக்கொண்டார். அப்போதும் பெரிய அளவில் பாதிப்பில்லாமல் அங்கே இருந்து மீட்கப்பட்டார். இந்த இரண்டு செய்திகளையும் ஒப்பிட்டு 'ஸ்ரீகுமார் சார் உங்களுக்கு நெருப்புல கண்டம்... பாத்து ஜாக்கிரதை' என கருத்து பதிவிட்டுள்ளனர்.