Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சொத்து விபரம் தாக்கல் செய்யணும்: நடிகர் விஷாலுக்கு கோர்ட் உத்தரவு

27 ஆக, 2022 - 10:25 IST
எழுத்தின் அளவு:
Court-order-to-Vishal

சென்னை : படத் தயாரிப்பு நிறுவனமான 'லைகா' தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷாலின் சொத்து விபரங்களை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷாலுக்கு சொந்தமாக, சினிமா தயாரிப்பு நிறுவனம் உள்ளது. தன் நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, 'கோபுரம் பிலிம்ஸ்' நிறுவனத்திடம் இருந்து 21.29 கோடி ரூபாய் பெற்றார். இந்த தொகையை, 'லைகா' நிறுவனம் செலுத்தியது. லைகா நிறுவனமும், விஷாலும் ஒப்பந்தம் மேற்கொண்டனர். அதன்படி, கடன் தொகையை திருப்பி செலுத்தும் வரை விஷால் நிறுவன படங்களின் உரிமைகளை, லைகாவுக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடன் தொகையை வழங்காமல், வீரமே வாகை சூடும் படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், 'சாட்டிலைட்' மற்றும் ஓ.டி.டி., உரிமையை விற்கவும் தடை விதிக்கக் கோரி, விஷால் நிறுவனத்துக்கு எதிராக, லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 15 கோடி ரூபாயை, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் பெயரில், தேசிய வங்கியில் மூன்று வாரங்களில் 'டிபாசிட்' செய்ய, விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு நேற்று நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நடிகர் விஷால் ஆஜரானார். உத்தரவை அமல்படுத்தாதது குறித்து, நீதிபதி கேள்வி எழுப்பினார். 'லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்ததால், பணத்தை செலுத்தவில்லை; ஒரே நாளில் 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

ஆறு மாதங்கள் கழிந்தாலும் பணத்தை செலுத்த இயலாது' என, விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு, லைகா தரப்பில் நடிகர் விஷால் தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாகவும், கணக்கு விபரங்களை தாக்கல் செய்யட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 'படங்களில் தொடர்ந்து நடிக்கும்போது, கடன் தொகையை திருப்பிச் செலுத்தலாமே...' என நீதிபதி கூறியதற்கு, ஏற்கனவே ஏற்பட்ட இழப்பை சரி செய்யவே தொடர்ந்து படங்களில் நடிப்பதாக விஷால் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, விஷால் தரப்பில் விளக்கமும், சொத்து விபரங்கள் அடங்கிய மனுவையும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, செப்டம்பர் 9க்கு தள்ளி வைத்து, அன்று விஷால் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிரெண்டிங்கில் முதலிடத்தில் 'கோப்ரா' டிரைலர்டிரெண்டிங்கில் முதலிடத்தில் ... கே.பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை : நோட்டீஸ் அனுப்பியது நடிகர் சங்கம் கே.பாக்யராஜ் மீது ஒழுங்கு நடவடிக்கை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தமிழன் - கோவை,இந்தியா
27 ஆக, 2022 - 11:41 Report Abuse
தமிழன் குடுத்த கடன கேட்டா என்ன திமிராய் பதில் தரான்?? வழக்கு போட்டதால் கட்ட முடியாதாம்??? நஷ்டம் ஆகிருச்சாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in