Advertisement

சிறப்புச்செய்திகள்

பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பழைய தயாரிப்பாளரிடம் வந்த 'சூர்யா 42'

22 ஆக, 2022 - 12:13 IST
எழுத்தின் அளவு:
Suriya-backs-to-old-producer

'ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு சூர்யா நடித்து வரும் படம் 'வணங்கான்'. பாலா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டத்துடன் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு சூர்யாவின் 42வது படம் ஆரம்பமாகி உள்ளது. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்று, இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 39வது படத்தைத் தாங்கள் தயாரிக்கப் போவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி அறிவித்தது. ஆனால், அந்தப் படத்தை இயக்குவதை விட்டுவிட்டு ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தை இயக்கப் போய்விட்டார் சிவா. அதனால், சிவாவுக்குப் பதிலாக சூர்யாவின் 39வது படத்தை ஹரி இயக்குவார் எனவும் அந்தப் படத்திற்கு 'அருவா' எனப் பெயரிட்டுள்ளதாகவும் 2020ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்டுடியோ க்ரீன் அறிவித்தது. ஆனால், அந்தப் படமும் நடக்காமல் டிராப் செய்யப்பட்டது. கடைசியில் சூர்யாவின் 39வது படமாக 'ஜெய் பீம்' படம் வெளிவந்தது.

அதன் பிறகு சமீபத்தில் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணி இணையும் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் என அறிவிப்பு வெளிவந்தது. அந்தக் கூட்டணியை மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவித்த ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்காமல் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக வந்த அறிவிப்பை திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சூர்யாவின் இந்த 42வது படத்தில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் கூட்டாக சேர்ந்து தயாரிக்க உள்ளதாம். இந்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடிவாசல்' ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

கடந்த சில வருடங்களில் சூர்யாவின் படங்களின் ஆரம்பம், படப்பிடிப்பு, வெளியீடு ஆகியவை குறித்து குழப்பமான தகவல்கள் வெளிவருவது அவருடைய ரசிகர்களையும் சேர்த்து குழப்பி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதை, கேரக்டர் தான் பார்ப்பேன் ; ஹீரோ அல்ல - ஷ்ரத்தா தாஸ்கதை, கேரக்டர் தான் பார்ப்பேன் ; ஹீரோ ... மகன் பள்ளி விழாவில் ஒன்றாகக் கலந்து கொண்ட தனுஷ், ஐஸ்வர்யா மகன் பள்ளி விழாவில் ஒன்றாகக் கலந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in