பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இருவரும் பிரியப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதற்குப் பிறகு அவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருவரும் தனித்தனியாக இருக்கும் புகைப்படங்களைத்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இன்று அவர்களின் மூத்த மகன் யாத்ரா, அவரது பள்ளியில் விளையாட்டுக் குழு கேப்டனாக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் இளைய மகன் லிங்கா மற்றும் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினரும் இருக்கும் புகைப்படம் சமக வலைத்தளங்களில் வைரலாகியது.
“இன்றைய நாள் சிறப்பாக ஆரம்பமானது. எனது மூத்த மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக உறுதி மொழி ஏற்கும் பள்ளியின் நிகழ்வை திங்கள் கிழமை காலையில் பார்க்கிறேன்,” என ஐஸ்வர்யா அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.