லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், அவரது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா இருவரும் பிரியப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதற்குப் பிறகு அவர்களின் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் இருவரும் தனித்தனியாக இருக்கும் புகைப்படங்களைத்தான் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இன்று அவர்களின் மூத்த மகன் யாத்ரா, அவரது பள்ளியில் விளையாட்டுக் குழு கேப்டனாக பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுடன் இளைய மகன் லிங்கா மற்றும் பின்னணிப் பாடகர் விஜய் யேசுதாஸ் குடும்பத்தினரும் இருக்கும் புகைப்படம் சமக வலைத்தளங்களில் வைரலாகியது.
“இன்றைய நாள் சிறப்பாக ஆரம்பமானது. எனது மூத்த மகன் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக உறுதி மொழி ஏற்கும் பள்ளியின் நிகழ்வை திங்கள் கிழமை காலையில் பார்க்கிறேன்,” என ஐஸ்வர்யா அது பற்றி குறிப்பிட்டுள்ளார்.