ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் மாதவன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராக்கெட்ரி படம் வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. தற்போது ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இதன் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் தியேட்டர்கள் மூடல், ஹிந்தி படங்கள் தொடர் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாதவன், ‛‛தியேட்டர்கள் மூடப்படுவதற்கு படங்கள் நன்றாக இல்லை என்பதாலோ, மக்கள் வருகை குறைவு என்பதால் அல்ல. இங்கு பெரும்பாலான தியேட்டர்களில் சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லை. இன்னும் பழைய நிலைமையிலேயே உள்ளன. மக்களின் ரசனை வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. சரியான உள்கட்டமைப்பு வசதியில்லாத காரணத்தால் மக்கள் தியேட்டர்களுக்கு செல்வது குறைந்துள்ளது'' என்றார்.
மேலும் ஹிந்தி படங்கள் தோல்வி குறித்து பேசியவர், ‛‛கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பல தரப்பட்ட படங்களை பார்க்க தொடங்கினர். இதனால் அவர்களின் ரசனையும் மாறி உள்ளது. லால் சிங் சத்தா போன்ற நம்பிக்கைக்குரிய படங்களை விட புஷ்பா, கேஜிஎம் மாதிரியான தென்னிந்திய படங்கள் அதிக வரவேற்பை பெறுகின்றன. இதை வைத்து மட்டும் எந்த முடிவும் சொல்ல முடியாது. படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் நிச்சயம் அதற்கான அங்கீகாரத்தை வழங்குவார்கள்''.
இவ்வாறு மாதவன் கூறினார்.