நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ்த் திரையுலகின் சீனியர் நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார் உள்ளிட்டோர் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்கள். அவர்களுக்குப் பின் சினிமாவில் அறிமுகமான நடிகர்களில் ஒரு சிலர் மட்டும்தான் சமூக வலைத்தளங்களில் உள்ளார்கள்.
முன்னணி நடிகர்களில் விஜய் பெயரில் ஒரு டுவிட்டர் கணக்கு இருக்கிறது. ஆனால், அதில் எப்போதாவது ஒரு முறைதான் அப்டேட் வரும். அதையும் விஜய் நேரடியாக நிர்வகிக்கவில்லை. அவரது அலுவலகத்தில்தான் நிர்வகிக்கிறார்கள். விக்ரம், அஜித் இருவரும் சமூக வலைத்தளம் பக்கம் வராமல் இருந்தார்கள். இப்போது விக்ரம் டுவிட்டர் தளம் பக்கம் வந்துள்ளார். அதற்குள் 71 ஆயிரம் பேர் அவரைப் பின் தொடர்ந்துள்ளார்கள். வரும் போதே தன்னுடைய கணக்கை 'வெரிபைடு' வாங்கித்தான் நுழைந்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரது பெயரில் ஏற்கெனவே ஒரு கணக்கு உள்ளது. ஆனால், அதில் 214 வாரங்களுக்கு முன்பாகத்தான் தனது கடைசி பதிவை பதிவிட்டுள்ளார்.
டுவிட்டர் தளத்தில் விக்ரம் நுழைந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விக்ரம் நடித்துள்ள 'கோப்ரா' இந்த மாதம் 31ம் தேதியும் அடுத்த மாதம் 31ம் தேதி 'பொன்னியின் செல்வன்' படமும் வெளியாக உள்ளது. தாமதமாக வந்தாலும் சரியான நேரத்தில்தான் விக்ரம் டுவிட்டர் பக்கம் வந்துள்ளார்.