ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு உருவான புஷ்பா படத்தில் நாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். அவருடன் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் 350 கோடிக்கு மேல் வசூலித்தது. அதைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார் அல்லு அர்ஜுன். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சுதந்திர தின கொண்டாட்ட பேரணி ஒன்று நடைபெற உள்ளது. இந்த பேரணியில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி கலந்து கொள்கிறார் அல்லு அர்ஜுன். அதோடு இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்ட பேரணிகளை விட இந்த பேரணி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.