இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
செம்மர கடத்தலை மையமாகக் கொண்டு உருவான புஷ்பா படத்தில் நாயகனாக நடித்திருந்தார் அல்லு அர்ஜுன். அவருடன் ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் 350 கோடிக்கு மேல் வசூலித்தது. அதைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல் படத்தில் விரைவில் நடிக்கப் போகிறார் அல்லு அர்ஜுன். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் சுதந்திர தின கொண்டாட்ட பேரணி ஒன்று நடைபெற உள்ளது. இந்த பேரணியில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி கலந்து கொள்கிறார் அல்லு அர்ஜுன். அதோடு இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்ட பேரணிகளை விட இந்த பேரணி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.