சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
புகழ்பெற்ற இந்துக்களின் புனித ஸ்தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் முன்பு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஈ.வே.ராமசாமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பக்தியுடன் சாமி கும்பிட்டு வெளியே வரும்போது கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்கிற வாசகத்தை படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்கிற குரல் நெடுநாளாக ஒலித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வே.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் என்றார். அவரது இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டிருப்பதாவது: உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ பெரியார் சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன். என்று எழுதியிருக்கிறார். கஸ்தூரியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.