ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
புகழ்பெற்ற இந்துக்களின் புனித ஸ்தலமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவில் முன்பு கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட ஈ.வே.ராமசாமியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. பக்தியுடன் சாமி கும்பிட்டு வெளியே வரும்போது கடவுள் இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள் என்கிற வாசகத்தை படிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்கிற குரல் நெடுநாளாக ஒலித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவில் முன் உள்ள ஈ.வே.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் என்றார். அவரது இந்த கருத்துக்கு வரவேற்பும், எதிர்ப்பும் இருந்து வருகிறது.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி பதிவிட்டிருப்பதாவது: உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ பெரியார் சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன். என்று எழுதியிருக்கிறார். கஸ்தூரியின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நிலவி வருகிறது.