என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தென்னிந்திய மொழிகளில் பிரபலமான ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன். சில படங்களில் நடித்தும் உள்ளார். இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சார பயணம் கடந்த ஒரு மாதமாக இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுக்க நடந்தது. இதன் நிறைவு விழா சென்னை அருகே நடந்தது. இந்தக்கூட்டத்தில் கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛இந்துவாக இருப்பதே பெருமை. ஒருகாலத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு நாடுகளை பிடித்தனர். இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடுகளை பிடிக்கின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் தரிசனம் செய்கின்றனர். அப்படி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை(ஈ.வே.ராமசாமி) என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி நாள்'' என்றார்.
கனல் கண்ணன் குறிப்பிட்ட ஸ்ரீரங்கம் கோயிலின் முன்பு ஈ.வே.ராமசாமி சிலை உள்ளது. அதை உடைக்க வேண்டும் என அவர் பேசியது சர்ச்சையாகி உள்ளது.