ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் |
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சி எஸ் கார்த்திகேயன் இயக்கி வரும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இந்த படத்தில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கிறார். மேகா ஆகாஷ், மலையாள நடிகை கார்த்திகா முரளிதரன் மற்றும் தெலுங்கு நடிகை சாந்தினி சவுத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பள்ளி கல்லூரி மற்றும் அதை அடுத்த காலகட்டத்தில் ரொமான்ஸ் காமெடி ஜானரில் இந்தப் படம் உருவாகிறது. அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, மன்மத லீலை, வேழம், மற்றும் நித்தம் ஒரு வானம் ஆகிய படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கதாநாயகிகள் நடித்துள்ளனர். தற்போது அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்திலும் அவருக்கு மூன்று நடிகைகள் ஜோடியாக நடிக்கிறார்கள்.