தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

'வலிமை' படத்திற்கு பிறகு இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார். அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் .. இவர்களுடன் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது.
இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தபோது அஜித் திடீரென ஐரோப்பாவிற்கு வெளிநாடு சுற்றுலா பயணம் சென்றார். அங்கு பல இடங்களில் பைக்கில் அவர் சுற்றிய படங்கள் வைரலாகின. அவர் இல்லாமலேயே சமீபத்தில் மற்ற நடிகர்களை வைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது. இம்மாத இறுதியில் சென்னை திரும்புவார் என கூறப்பட்ட நிலையில் வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு இன்று அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையம் வந்த அஜித்தின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது .