ஏப்., 30க்கு தள்ளிப்போனது ‛பெத்தி' | படம் வெளியாகும் முன்பே பாராட்டிய ரஜினிகாந்த்: ஏன் தெரியுமா? | பிப்ரவரி தொடங்கிவிட்டது: அஜித் பட அறிவிப்பு எப்போது? | 'அரசன்' படத்தில் இருந்து விலகினாரா விஜய்சேதுபதி? | தர்பார் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 விலும் இடம்பெற்ற ஜதின் ஷர்மா | வழக்கமான ராணுவ படம் அல்ல : மோகன்லால் 367வது பட இயக்குனர் தகவல் | தம்பியின் திருமணத்திற்கு முந்திய போட்டோஷூட்டில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன்! | 'வாரணாசி' படம் புராணம், தெய்வீகம் கலந்த கலவையாக இருக்கும்! -இயக்குனர் ராஜமவுலி தகவல் | சரத்குமார் நடிக்கும் 'ஆழி' படம் பிப்ரவரி 27ல் ரிலீஸ்! | ராஜமவுலியிடம் பிரியங்கா சோப்ரா வைத்த முக்கியமான கோரிக்கை |

நடிகர் சிம்பு 40 வயதை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னும் திருமணம் செய்யவில்லை. அவருக்கு ஏற்ற மணப்பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறியவர், மேல் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல உதவிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கும் டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடத்தில் சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‛‛திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இந்த உலகத்தில் கடவுள் எழுதினால் தான் திருமணம் நடக்கும். நிச்சயமாக சிம்புவின் நல்ல மனதிற்கு ஒரு நல்ல மணப்பெண்ணை, நல்ல குலமகளாக, திருமகளாக என் வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளை இறைவன் அனுப்ப வேண்டும் என நான் வேண்டுகிறேன். மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து கடவுள்களிடம் இதுகுறித்து பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார் டி.ராஜேந்தர்.