ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
இயக்குனர், நடிகர் என பன்முக திறமை கொண்டவர் டி.ராஜேந்தர். சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். டி.ராஜேந்தரின் மகனும், நடிகருமான சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்று அப்பாவின் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று நலமான டி.ராஜேந்தர் அமெரிக்காவில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். முழுமையாக குணமாகி இன்று அதிகாலை சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர். அவருக்கு லட்சிய திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர் : ‛‛தமிழ்நாட்டு மக்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனையின் பலனால் நலமாகி உள்ளேன். இன்றைக்கு அதே பழைய தெம்போடு, உணர்வோடு தாய் மண்ணிற்கு வந்துள்ளேன். அமெரிக்காவில் சிகிச்சை பெற வேண்டும் என என் மகன் சிம்பு வலியுறுத்தியபோது என் தாய் மண்ணான தமிழ்நாட்டிலேயே சிகிச்சை பெறலாம் என்று சொன்னேன். ஆனால் சிம்பு அங்கு தான் போக வேண்டும் என்றார். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற கூற்றுக்கு ஏற்ப அமெரிக்காவில் உயர் சிகிச்சைக்கு சென்றேன்.