விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
நடிகர் சிம்பு 40 வயதை நெருங்கிவிட்டார். ஆனால் இன்னும் திருமணம் செய்யவில்லை. அவருக்கு ஏற்ற மணப்பெண்ணை அவரது குடும்பத்தார் தேடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பிய டி.ராஜேந்தருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, தனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றி கூறியவர், மேல் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல உதவிய முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஆகியோருக்கும் டி.ராஜேந்தர் நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடத்தில் சிம்பு திருமணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‛‛திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. இந்த உலகத்தில் கடவுள் எழுதினால் தான் திருமணம் நடக்கும். நிச்சயமாக சிம்புவின் நல்ல மனதிற்கு ஒரு நல்ல மணப்பெண்ணை, நல்ல குலமகளாக, திருமகளாக என் வீட்டிற்கு ஒரு நல்ல மருமகளை இறைவன் அனுப்ப வேண்டும் என நான் வேண்டுகிறேன். மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து கடவுள்களிடம் இதுகுறித்து பிரார்த்தனை செய்கிறேன்'' என்றார் டி.ராஜேந்தர்.