பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து கடந்த வாரம் வெளிவந்த 'கார்கி' படம் ரசிகர்களின் பாராட்டுக்களையும், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது. அதன் பிறகுதான் படம் மீதான பார்வை ரசிகர்களிடம் ஏற்பட்டது. படம் வெளியான பின் இரு தினங்களுக்கு முன்பு சூர்யா இந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தார். “நீண்ட காலத்திற்கு ஞாபகத்தில் வைத்துக் கொள்ளக் கூடிய சிறப்பாக எழுதப்பட்ட, சிறப்பாக உருவாக்கப்பட்ட படம். நலம் விரும்பிகள், ரசிகர்கள், மீடியா என அனைவரிடமும் அன்பையும் மரியாதையையும் படக்குழு பெற்றுவிட்டது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு இன்று நன்றி தெரிவித்துள்ள சாய் பல்லவி, “அனைத்திற்கும் நன்றி சார். உங்கள் உதவியால் தான் கார்கி பெரிய அளவில் ரசிகர்களிடம் சென்று சேர்ந்தது. இதற்காக ஜோதிகா மேடத்திற்கும் நன்றி சொல்லுங்கள்,” எனத் தெரிவித்துள்ளார்.