20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை சாந்தினி. இவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார். தன்னோடு நெருக்கமாக பழகி, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னோடு வாழ்ந்ததாகவும் தான் கர்ப்பமானபோது அதை வலுக்கட்டாயமாக கலைக்க வைத்ததாகவும் புகாரில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் பொய்யான புகார் கூறிய சாந்தினி மீது மணிகண்டன் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கண்டனம் தெரிவித்தது.