இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் | பழைய பாடலின் இசையுடன் 'பைட் கிளப்' டீசர் |
திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை சாந்தினி. இவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார். தன்னோடு நெருக்கமாக பழகி, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னோடு வாழ்ந்ததாகவும் தான் கர்ப்பமானபோது அதை வலுக்கட்டாயமாக கலைக்க வைத்ததாகவும் புகாரில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் பொய்யான புகார் கூறிய சாந்தினி மீது மணிகண்டன் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கண்டனம் தெரிவித்தது.