ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை சாந்தினி. இவர் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்தார். தன்னோடு நெருக்கமாக பழகி, திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்து தன்னோடு வாழ்ந்ததாகவும் தான் கர்ப்பமானபோது அதை வலுக்கட்டாயமாக கலைக்க வைத்ததாகவும் புகாரில் கூறி இருந்தார். இந்த புகாரின் பேரில் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறுவதாக நடிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் பொய்யான புகார் கூறிய சாந்தினி மீது மணிகண்டன் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்தால் என்ன செய்வீர்கள் என்று கண்டனம் தெரிவித்தது.