சினிமாவை விட்டு விலகப்போகிறேன்: மிஷ்கின் சொல்கிறார் | இமான் இசை நிகழ்ச்சி ரத்து | 1600 தியேட்டர்களில் 'குபேரா' : தயாரிப்பாளர்கள் தகவல் | அடுத்த வாரம் புதிய படங்களின் அப்டேட் வாரம் | விமான விபத்து : சினிமா விழாக்கள் தள்ளி வைப்பு | பிளாஷ்பேக்: தமிழில் மட்டும் தோல்வி அடைந்த பாண்டவர்கள் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 3 கதைகள் | கைதி 2 படத்தில் இடம்பெறும் விக்ரம் படத்தின் 3 எல்சியு கேரக்டர்கள் | அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி | கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? |
தமிழை விட தெலுங்கில் நிறைய புதுமுக நாயகிகள், வளரும் நாயகிகள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை. கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ தாக்கத்தால் பல புதிய படங்கள் ஆரம்பிக்காத நிலையில் அறிமுக நடிகைகள் வருவதும் குறைந்துள்ளது.
தெலுங்கில், “டாக்சிவாலா, திம்மருசு, எஸ்ஆர் கல்யாண மண்டபம், கமனம்” ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பிரியங்கா ஜவல்கர். பேஷன் டிசைனிங் படித்து முடித்து பின்னர் அமெரிக்கா சென்று வேலை பார்த்து வந்தவர். சமூக வலைத்தளத்தில் அவருடைய புகைப்படங்களைப் பார்த்து நடிக்க அழைத்து தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டார்.
சமீபத்தில் தனது ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் சாட் செய்த பிரியங்காவிடம் ஒரு ரசிகர், “கோலிவுட்டில் உங்களுக்கு யார் மீது ஆசை” எனக் கேட்டதற்கு, “எப்போதுமே தனுஷ், இப்போது சிம்புவையும் சில காரணங்களுக்காகக் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இருவருமே அழகானவர்கள்,” என்று பதிலளித்திருக்கிறார்.
தங்களைப் பிடிக்கும் எனச் சொன்ன பிரியங்காவிற்கு தனுஷ், சிம்பு இருவரில் யார் நடிக்க வாய்ப்பு கொடுக்கப் போகிறார்கள்?.