ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |
மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி தமிழில் ஆக் ஷன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கு, மலையாளத்திலும் நடிக்கிறார். கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய்பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ‛கார்கி'. இந்த படத்தில் தயாரிப்பாளராக இணைந்துள்ளார் நடிகை ஐஸ்வர்ய லட்சுமி.
இப்பட விழா சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, ‛‛இந்த படம் தாமதம் ஆனது பற்றி கூறியபோது மேடையில் கண்கலங்கினார். அவரை சாய்பல்லவி, கவுதம் ஆகியோர் சமாதானம் செய்தனர்.
சாய்பல்லவி பேசும்போது, இந்த படம் 3 ஆண்டுகளாக உருவானது. இந்த கதை உருவாக்கத்தில் இருந்தே இந்த படத்துடன் பயணிக்கிறார் ஐஸ்வர்ய லட்சுமி. அதனால் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார் என்றார். மேலும் இயக்குனர் கவுதம் கூறுகையில் இந்த படத்திற்கு நிறைய நண்பர்கள் உதவி செய்தனர். அதில் முதல்நபர் ஐஸ்வர்ய லட்சுமி தான். இந்த படத்திற்காக தான் சம்பாதித்த பணத்தை கொடுத்தார் என்றார்.
தொடர்ந்து பேசிய ஐஸ்வர்ய லட்சுமி, ‛‛கார்கி படம் சாய்பல்லவி இல்லாமல் சாத்தியமில்லை. இந்த படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் நன்றி'' என்றார்.