Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலியல் புகார் நடிகரின் ஜாமினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடிய நடிகை

03 ஜூலை, 2022 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Sexual-assault-case:-Actor-Vijay-Babu-in-supreme-court

மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது கடந்த ஏப்ரல் 22ம் தேதி மலையாள துணை நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்தார். அதை மறுத்த விஜய்பாபு சோசியல் மீடியாவில் சம்பந்தப்பட்ட நடிகையின் அடையாளத்தை வெளிப்படுத்தினார். இந்த இரண்டு காரணங்களுக்காக விஜய்பாபு மீது போலீஸார் வழக்குப் பதிந்த நிலையில் போலீசாரிடம் கைதாவதை தவிர்க்க வெளிநாடு தப்பிச்சென்று தலைமறைவானார் விஜய்பாபு. அங்கிருந்தபடியே நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு விண்ணப்பிக்க, அவர் கேரளா திரும்பினால் மட்டுமே ஜாமின் மனு குறித்து பரிசீலிக்கப்படும் என நிபந்தனை விதித்தது நீதிமன்றம்.

இதை தொடர்ந்து கேரளா திரும்பிய அவர் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜரானார். அதைத்தொடர்ந்து உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமின் அளித்தது. அதேசமயம் விசாரணை அதிகாரிகள் முன் ஜூலை 3ம் தேதி வரை தினசரி ஆஜராக வேண்டும் என்றும் வெளிநாடு எங்கும் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கியது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகையின் தந்தை தனது விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார்.

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக கேரள அரசு நடிகரின் ஜாமினை ரத்து செய்யக்கோரி நான்கு நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது எதிர்பாராத ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், போலீசாரின் பிடியில் அகப்படாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றது அரசின் மீது ஒரு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதால் இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது கேரள அரசு. இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நடிகையும் தற்போது நடிகரின் ஜாமின் மனுவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நடிகர் ஜாமினில் வெளியே இருந்தால் சாட்சியங்களையும் தடயங்களையும் கலைத்துவிட வாய்ப்புண்டு என்று கூறி அவரது ஜாமினை ரத்து செய்யும்படி அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் காஷ்மீர் கனவை நனவாக்கிய சீதாராமம் ; மகிழ்ச்சியில் துல்கர் சல்மான்என் காஷ்மீர் கனவை நனவாக்கிய ... 'விக்ரம்' படத்தை பெரிதும் பாராட்டிய மகேஷ் பாபு 'விக்ரம்' படத்தை பெரிதும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in