அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் |
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குக் கிடைத்த வெற்றி சில பல தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளது. கமல்ஹாசனின் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 400 கோடி வசூலைக் கடப்பது சாதாரண விஷயமல்ல.
கமல் நடித்து அடுத்து வெளிவரும் படங்களுக்கும் நல்ல வியாபாரம், வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடும். அதனால், கடந்த இரண்டு வருடங்களாக முடங்கி இருக்கும் 'இந்தியன் 2' படத்திற்கு தற்போது உயிர் வந்துள்ளது.
ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைக்கா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று பின் பஞ்சாயத்து நடந்து முடிந்துள்ளது. 'இந்தியன் 2' படத்தில் உதயநிதி இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
ஷங்கர், கமல்ஹாசன், லைக்கா, உதயநிதி தரப்பு என அமர்ந்து பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்துள்ளார்களாம். ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்க இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். அது முடிந்ததுமே 'இந்தியன் 2' ஆரம்பமாகிவிடும் என்று சொல்கிறார்கள்.