மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படத்திற்குக் கிடைத்த வெற்றி சில பல தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளது. கமல்ஹாசனின் திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 400 கோடி வசூலைக் கடப்பது சாதாரண விஷயமல்ல.
கமல் நடித்து அடுத்து வெளிவரும் படங்களுக்கும் நல்ல வியாபாரம், வசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு தானாகவே வந்துவிடும். அதனால், கடந்த இரண்டு வருடங்களாக முடங்கி இருக்கும் 'இந்தியன் 2' படத்திற்கு தற்போது உயிர் வந்துள்ளது.
ஷங்கர், தயாரிப்பு நிறுவனமான லைக்கா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று பின் பஞ்சாயத்து நடந்து முடிந்துள்ளது. 'இந்தியன் 2' படத்தில் உதயநிதி இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார்.
ஷங்கர், கமல்ஹாசன், லைக்கா, உதயநிதி தரப்பு என அமர்ந்து பேசி ஒரு சுமூகமான முடிவுக்கு வந்துள்ளார்களாம். ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிக்க இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாம். அது முடிந்ததுமே 'இந்தியன் 2' ஆரம்பமாகிவிடும் என்று சொல்கிறார்கள்.