நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

இந்திய அளவில் தங்களது படங்கள் மூலம் வசூலில் சாதனை படைத்தவர்கள் பிரபாஸ், யஷ். 'பாகுபலி 2' படம் மூலம் 1000 கோடி வசூலை பிரபாஸும், 'கேஜிஎப் 2' படம் மூலம் 1000 கோடி வசூலை யஷ்ஷும் கடந்து சாதனை படைத்தார்கள்.
'கேஜிஎப்' படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் மீண்டும் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இப்படத்தில் 'கேஜிஎப்' நாயகன் யஷ் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேஜிஎப், சலார் இரண்டு படங்களுமே 'டான்' கதைகள்தான். அதனால் 'சலார்' படத்தில் 'கேஜிஎப்' ராக்கி பாய் கதாபாத்திரத்தை பிரசாந்த் நீல் இணைத்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதாவது, 'விக்ரம்' படத்தில் 'கைதி' இணைந்தது போல.
பிரபாஸ், யஷ் இருவரும் 'சலார்' படத்தில் இணைந்தால் அதுவே படத்திற்குப் பெரிய விளம்பரமாக அமையும்.