ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொண்ணூறுகளில் முன்னணி ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்சன் போன்ற வாரிசு நட்சத்திரங்கள் கதாநாயகிகளாக தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.
அந்தவகையில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் ஜோடியாக பட்டத்து யானை என்கிற படத்தில் அறிமுகமானார். அந்தப்படம் பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில் அர்ஜுனே தனது மகளை கதாநாயகியாக வைத்து சொல்லிவிடவா என்கிற படத்தை இயக்கினார். இருந்தும் ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் தேடி வரவில்லை.
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் மகளை அறிமுகப்படுத்தும் விதமாக தானே ஒரு படம் இயக்க மீண்டும் களம் இறங்கிவிட்டார் அர்ஜுன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்து தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஷ்வக் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.