25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தொண்ணூறுகளில் முன்னணி ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்சன் போன்ற வாரிசு நட்சத்திரங்கள் கதாநாயகிகளாக தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.
அந்தவகையில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் ஜோடியாக பட்டத்து யானை என்கிற படத்தில் அறிமுகமானார். அந்தப்படம் பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில் அர்ஜுனே தனது மகளை கதாநாயகியாக வைத்து சொல்லிவிடவா என்கிற படத்தை இயக்கினார். இருந்தும் ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் தேடி வரவில்லை.
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் மகளை அறிமுகப்படுத்தும் விதமாக தானே ஒரு படம் இயக்க மீண்டும் களம் இறங்கிவிட்டார் அர்ஜுன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்து தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஷ்வக் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.