‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

தொண்ணூறுகளில் முன்னணி ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் வில்லன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இது ஒருபக்கம் இருக்க வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்சன் போன்ற வாரிசு நட்சத்திரங்கள் கதாநாயகிகளாக தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளனர்.
அந்தவகையில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் ஜோடியாக பட்டத்து யானை என்கிற படத்தில் அறிமுகமானார். அந்தப்படம் பெரிதாக வரவேற்பு பெறாத நிலையில் அர்ஜுனே தனது மகளை கதாநாயகியாக வைத்து சொல்லிவிடவா என்கிற படத்தை இயக்கினார். இருந்தும் ஐஸ்வர்யாவுக்கு பட வாய்ப்புகள் ஏதும் தேடி வரவில்லை.
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் மகளை அறிமுகப்படுத்தும் விதமாக தானே ஒரு படம் இயக்க மீண்டும் களம் இறங்கிவிட்டார் அர்ஜுன். கடந்த சில நாட்களுக்கு முன்பு இது குறித்து தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகரான விஷ்வக் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழாவில் கலந்துகொண்டு படப்பிடிப்பை துவங்கி வைத்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.