''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த உப்பெனா என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கிர்த்தி ஷெட்டி. அதையடுத்து தெலுங்கில் சில படங்களில் நடித்தவர், தற்போது ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அதையடுத்து தற்போது பாலா இயக்கி வரும் சூர்யாவின் 41வது படத்தில் நாயகியாக நடித்து வரும் கிர்த்தி ஷெட்டி, மாநாடு பட இயக்குனர் வெங்கட் பிரபு, நாக சைதன்யாவை வைத்து தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்திலும் அடுத்து நடிக்கப் போகிறார். இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு. அதோடு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் வெங்கட்பிரபு, நாகசைதன்யா, கிர்த்தி ஷெட்டி, யுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதோடு சிறப்பு விருந்தினர்களாக பாரதிராஜா, சிவகார்த்திகேயன், ராணா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
![]() |