தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு |

மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. அந்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் ரயில் எரிப்பு உள்ளிட்ட வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஆளும் பாஜ, அக்னிபத் திட்டம் குறித்து இளைஞர்களுக்கு விளக்கம் அளித்து அவர்களை அமைதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அக்னிபத் போராட்டம் குறித்து ஒரு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், அக்னிபத் திட்டம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. இந்த திட்டத்திற்கு போராட்டங்கள் வெடித்திருப்பதை வைத்து பார்க்கும்போது தேச துரோகிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். இவர்களை பின்னால் இருந்து யாரோ இருக்கிறார்கள். இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் எப்படி நாளை நாட்டை காப்பாற்றுவார்கள். பொதுச்சொத்தை சேதப்படுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் தேச துரோகிகள் தான் என்றார்.