டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? |

தமிழ்க் கலாச்சாரத் திருமணங்களில் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு கொஞ்சம் தடிமனான மஞ்சள் கயிற்றில் செய்யப்பட்ட தாலியைத்தான் மணமகன் கட்டுவார். பிறகு நல்ல நாளில் அந்த புதுத் தாலியை மாற்றி தங்க செயினாகவோ அல்லது மெல்லிய கயிற்றிலோ 'தாலி பிரித்து' கோர்க்கும் வைபவத்தை பெரும்பாலான குடும்பங்களில் நடத்துவார்கள்.
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் காதல் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. தற்போது இந்த புதுமணத் தம்பதியினர் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடி வருகிறார்கள். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நயன்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவப்பட்டு வருகிறது. அதில் கழுத்தில் புதுத் தாலியுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படமாக உள்ளது. பொதுவாக திருமணம் முடிந்த புதுப் பெண்கள், அதிலும் நடிகைகள் போன்று திரைப்பிரபலங்கள் வேலைக்குச் செல்லும் போது அந்தத் தாலியை ஆடைக்குள் மறைப்பது வழக்கம். தான் புதிதாகத் திருமணமான பெண் என காட்டிக் கொள்ள கூச்சப்படுவார்கள். ஒரு சில பெண்கள் மட்டுமே அந்த புதுத் தாலி தெரிந்தாலும் பரவாயில்லை எனச் செல்வார்கள்.
நடிகை நயன்தாரா தன்னுடைய புகைப்படங்களில் புதுத் தாலியை மறைத்துக் கொள்ளாமல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். தமிழகத்தின் மருமகளாக தமிழ்க் கலாச்சாரத்தை பாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்.