விஜய்யின் 'முரசு' படம் நின்று போக இப்படி ஒரு காரணமா ? 20 வருடம் கழித்து வெளியான தகவல் | முதன்முதலாக குழந்தையை அறிமுகப்படுத்திய தீபிகா, ரன்வீர் சிங் | திலீப்பின் கல்யாணராமன் படத்தை 23 வருடங்களுக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யும் நடிகர் லால் | தமிழ் இயக்குனர்களின் சாதியப் படங்கள் : துருவ் விக்ரம் விளக்கம் | காந்தாரா வராஹரூபம் பாடலுக்கு நடனம் ஆடிய பார்வதி ஜெயராம் | சிரஞ்சீவி வீட்டில் நயன்தாரா குடும்பத்தினரின் தீபாவளி கொண்டாட்டம் | எந்த ஒரு கட்டுக்கதையும் என்னை அழித்துவிட முடியாது ; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து அஜ்மல் | 3வது முறையாக பிரித்விராஜூடன் பார்வதி இணைந்து நடிக்கும் 'ஐ நோபடி' படப்பிடிப்பு நிறைவு | இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? |
தமிழ்க் கலாச்சாரத் திருமணங்களில் திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு கொஞ்சம் தடிமனான மஞ்சள் கயிற்றில் செய்யப்பட்ட தாலியைத்தான் மணமகன் கட்டுவார். பிறகு நல்ல நாளில் அந்த புதுத் தாலியை மாற்றி தங்க செயினாகவோ அல்லது மெல்லிய கயிற்றிலோ 'தாலி பிரித்து' கோர்க்கும் வைபவத்தை பெரும்பாலான குடும்பங்களில் நடத்துவார்கள்.
நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சமீபத்தில் காதல் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது. தற்போது இந்த புதுமணத் தம்பதியினர் தாய்லாந்தில் தேனிலவு கொண்டாடி வருகிறார்கள். அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் ஏற்கெனவே வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நயன்தாராவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவப்பட்டு வருகிறது. அதில் கழுத்தில் புதுத் தாலியுடன் நயன்தாரா இருக்கும் புகைப்படமாக உள்ளது. பொதுவாக திருமணம் முடிந்த புதுப் பெண்கள், அதிலும் நடிகைகள் போன்று திரைப்பிரபலங்கள் வேலைக்குச் செல்லும் போது அந்தத் தாலியை ஆடைக்குள் மறைப்பது வழக்கம். தான் புதிதாகத் திருமணமான பெண் என காட்டிக் கொள்ள கூச்சப்படுவார்கள். ஒரு சில பெண்கள் மட்டுமே அந்த புதுத் தாலி தெரிந்தாலும் பரவாயில்லை எனச் செல்வார்கள்.
நடிகை நயன்தாரா தன்னுடைய புகைப்படங்களில் புதுத் தாலியை மறைத்துக் கொள்ளாமல் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார். தமிழகத்தின் மருமகளாக தமிழ்க் கலாச்சாரத்தை பாலோ செய்ய ஆரம்பித்துவிட்டார்.