மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

கொரோனா தொற்று காரணமாக திரைப்படத்துறை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சினிமாத்துறை முன்பைவிட அதிக வேகத்தில் வசூலை குவித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்கள் கோடிகளை குவித்தது. கொரோனா காலத்தில் சம்பள உயர்வு எதையும் தொழிலாளர்கள் பெறவில்லை.
சினிமா தொழிலாளர்களுக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது சினிமாவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, இன்று (ஜூன் 22) முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் தெலுங்கு படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஐதராபாத்தில் நடந்து வரும் தமிழ் படத்தின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.




