விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியா சினிமாவில் இந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய திருமணமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் அமைந்தது. சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அவர்களது திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சில பல வருடங்களாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்தை முன்னிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் பல கோடி மதிப்புள்ள பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் 5 கோடி மதிப்புள்ள வைர மோதிரம், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பரிசளித்துள்ளாராம். அது போல நயன்தாரா திருமணத்திற்கு முன்பே விக்னேஷ் சிவனுக்காக 20 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை வாங்கி, அதை திருமணப் பரிசாகக் கொடுத்தாராம். இப்படி நேற்று முதலே செய்தி சுற்றிக் கொண்டிருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் 'நானும் ரௌடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அவரது முதல் படமான 'போடா போடி' ஓடவில்லை. சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் வியாபார ரீதியாக தோல்வியைத் தழுவிய படமாக அமைந்தது. அதற்குள் விக்னேஷ் சிவன் 10 கோடி வரை சம்பாதித்து தனது மனைவி நயன்தாராவிற்கு பரிசளித்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
நயன்தாரா புதிதாக 20 கோடியில் வீடு வாங்கினார் என்பதை வேண்டுமானால் நம்பலாம் என்கிறார்கள். இந்த புது வீட்டிற்கு புதுமணத் தம்பதியினர் விரைவில் குடியேறுவார்கள் எனத் தெரிகிறது.