'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் |

சென்னை: நிலம் வாங்கித் தருவதாக, நடிகர் சூரியிடம் பண மோசடி செய்தது தொடர்பாக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரமேஷ் குடவாலாவின் வாக்குமூலத்தை, போலீசார் பதிவு செய்துள்ளனர்.
காவல் துறையில் டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர் ரமேஷ் குடவாலா. இவர், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நடித்த விஷ்ணு விஷாலின் தந்தை. இவரும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் நிலம் வாங்கித் தருவதாக 2.70 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி, அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சூரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், துணை கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும்; அதை, கூடுதல் கமிஷனர் கண்காணிக்க வேண்டும்; விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கெடு விதித்தது.
இதையடுத்து, புகார்தாரரான சூரியிடம் பல மணி நேரம் விசாரித்து, 110 கேள்விகள் கேட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, ரமேஷ் குடவாலாவுக்கு, 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, தன் மகனும், நடிகருமான விஷால் விஷ்ணுவுடன், ரமேஷ் குடவாலா, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் முன் ஆஜரானார். பண மோசடி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலிடமும் விசாரணைநடந்ததாக கூறப்படுகிறது.