இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
சென்னை: நிலம் வாங்கித் தருவதாக, நடிகர் சூரியிடம் பண மோசடி செய்தது தொடர்பாக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரமேஷ் குடவாலாவின் வாக்குமூலத்தை, போலீசார் பதிவு செய்துள்ளனர்.
காவல் துறையில் டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர் ரமேஷ் குடவாலா. இவர், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நடித்த விஷ்ணு விஷாலின் தந்தை. இவரும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் நிலம் வாங்கித் தருவதாக 2.70 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி, அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சூரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், துணை கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும்; அதை, கூடுதல் கமிஷனர் கண்காணிக்க வேண்டும்; விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கெடு விதித்தது.
இதையடுத்து, புகார்தாரரான சூரியிடம் பல மணி நேரம் விசாரித்து, 110 கேள்விகள் கேட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, ரமேஷ் குடவாலாவுக்கு, 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, தன் மகனும், நடிகருமான விஷால் விஷ்ணுவுடன், ரமேஷ் குடவாலா, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் முன் ஆஜரானார். பண மோசடி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலிடமும் விசாரணைநடந்ததாக கூறப்படுகிறது.