ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சில நடிகைகள் தங்களது தனி முத்திரையை பதித்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்களில் ஜெனிலியாவும் ஒருவர். தமிழில் 'பாய்ஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதன்பின் “சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம்” ஆகிய படங்களில் நடித்தார். அவற்றில் 'சச்சின்' படத்தின் ஷாலினி கதாபாத்திரமும், 'சந்தோஷ் சுப்பிரமணியம்' படத்தின் ஹாசினி கதாபாத்திரமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.
2012ம் ஆண்டில் மறைந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனான ரித்தேஷ் தேஷ்முக்கைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
திருமணத்திற்குப் பிறகு அதிகம் நடிக்காமல் இருந்த ஜெனிலியா தற்போது மராத்தி, ஹிந்தி ஆகியவற்றில் தலா ஒரு படத்திலும், தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஜெனிலியா நேற்று மஞ்சள் நிற ஆடையுடன் சில புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவற்றைப் பார்த்தால் ஜெனிலியாவை யாரும் இரண்டு மகன்களுக்கு அம்மா என்று சொல்ல மாட்டார்கள். 'சச்சின்' படத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார்.
இப்போது கூட மீண்டும் தமிழுக்கு வந்து விஜய் ஜோடியாக நடித்தாலும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.