‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் எப்பொழுதும் ஜாலியாக சுற்றுலா கிளம்பிவிடும் நடிகைகள் பட்டியலில் மாளவிகா மோகனன் முதல் ஆளாக இருக்கிறார். மாலத்தீவு மற்றும் வெளிநாடுகளுக்கு அடிக்கடி சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்த மாளவிகா, சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடோபா வனவிலங்கு சரணாலயத்திற்கு தனது தோழிகள் இருவருடன் விசிட் அடித்து சில நாட்களாக காட்டிற்குள் வனவிலங்குகளை நேரில் பார்ப்பதற்காக தினசரி சபாரி மேற்கொண்டிருந்தார்.
இந்தநிலையில் இந்த பயணத்தின் கடைசி நாளாக இவர்கள் காட்டில் பயணம் மேற்கொண்டபோது நீண்ட நேரமாக எந்த ஒரு மிருகமும் தட்டுப்படவில்லை. இதனால் சற்றே அப்செட் ஆன மாளவிகாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் விதமாக அவர்கள் சென்ற பாதையில் சிறுத்தை ஒன்று இவர்கள் வரவுக்கு காத்திருந்தது போலவே அமர்ந்திருந்ததாம். உடனே தனது கேமராவை எடுத்து சிறுத்தையை புகைப்படம் எடுக்க ஆரம்பித்தார் மாளவிகா.
அந்த சிறுத்தை இவர்களை நோக்கி வந்ததும் மாளவிகாவுக்கு சில நொடிகள் மூச்சே ஸ்தம்பித்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். கிட்டத்த இப்படியே பத்து நிமிடங்கள் கழிந்தபிறகு சிறுத்தை இவர்களை பெரிதாக கண்டுகொள்ளாமல் தான் வந்த பாதை வழியே திரும்பி சென்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனராம் மாளவிகாவும் அவரது தோழிகளும்.