பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
பாலிவுட் சினிமாவில் சரித்திர படங்களுக்கென்று மினிமம் கியாரண்டி இருப்பது தான் இப்போதைய டிரண்டிங். மாமன்னர் பிருத்விராஜ், ஜான்சி ராணி, அக்பர் உள்ளிட்ட பலரின் சரித்திர கதைகள் சினிமா ஆகின.
அந்த வரிசையில் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் சிவாஜி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது மனைவியும், நடிகையுமான ஜெனிலியா தயாரிக்கிறார்.
இதுகுறித்து ரித்தேஷ் தேஷ்முக் கூறும்போது, ''இந்திய சரித்திரத்தில் மகத்தான இடத்தை பிடித்துள்ள மராட்டிய மன்னர் சிவாஜியாக நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படத்தை நானே டைரக்டும் செய்கிறேன். சத்ரபதி சிவாஜி என்ற பெயரே ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் ஆகும். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது பெயரை கேட்டாலே எமோஷனல் ஆவார்கள்.
இந்திய மண்ணில் பிறந்த மாணிக்கம் அவர். அவரது வாழ்க்கை எதிர்கால தலைமுறைக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை சினிமா படமாக எடுப்பதை பெருமையான விஷயமாக நினைக்கிறேன். எங்களின் இந்த புதிய முயற்சிக்கு அனைவரின் ஆசியும் வேண்டும்'' என்றார்.