'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் சினிமாவில் சரித்திர படங்களுக்கென்று மினிமம் கியாரண்டி இருப்பது தான் இப்போதைய டிரண்டிங். மாமன்னர் பிருத்விராஜ், ஜான்சி ராணி, அக்பர் உள்ளிட்ட பலரின் சரித்திர கதைகள் சினிமா ஆகின.
அந்த வரிசையில் தற்போது மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கையும் சினிமா ஆகிறது. இதில் சிவாஜி கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் நடிக்கிறார். இவரே படத்தை இயக்கவும் செய்கிறார். அவரது மனைவியும், நடிகையுமான ஜெனிலியா தயாரிக்கிறார்.
இதுகுறித்து ரித்தேஷ் தேஷ்முக் கூறும்போது, ''இந்திய சரித்திரத்தில் மகத்தான இடத்தை பிடித்துள்ள மராட்டிய மன்னர் சிவாஜியாக நடிப்பதில் பெருமை அடைகிறேன். இந்த படத்தை நானே டைரக்டும் செய்கிறேன். சத்ரபதி சிவாஜி என்ற பெயரே ஒரு உணர்வுப்பூர்வமான விஷயம் ஆகும். இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் அவரது பெயரை கேட்டாலே எமோஷனல் ஆவார்கள்.
இந்திய மண்ணில் பிறந்த மாணிக்கம் அவர். அவரது வாழ்க்கை எதிர்கால தலைமுறைக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அப்படிப்பட்டவரின் வாழ்க்கையை சினிமா படமாக எடுப்பதை பெருமையான விஷயமாக நினைக்கிறேன். எங்களின் இந்த புதிய முயற்சிக்கு அனைவரின் ஆசியும் வேண்டும்'' என்றார்.