‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தவர் ஜெனிலியா. ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்ட இவர் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛நடிப்பின் மீது எனக்கு காதல் வர காரணமே தென்னிந்திய சினிமா தான். தென்னிந்திய சினிமா எனக்கு நிறைய அன்பான ரசிகர்களையும் தந்தது. நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது பாலிவுட் வாய்ப்பு வந்தது. இருப்பினும் இங்கு நடித்ததால் பாலிவுட் என்னை கைவிட்டதோடு அங்கேயே செல் என்று கூறியது. தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார்.




