பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வந்தவர் ஜெனிலியா. ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் நடிப்பை கைவிட்ட இவர் இப்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து பேசி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛நடிப்பின் மீது எனக்கு காதல் வர காரணமே தென்னிந்திய சினிமா தான். தென்னிந்திய சினிமா எனக்கு நிறைய அன்பான ரசிகர்களையும் தந்தது. நான் தென்னிந்திய படங்களில் நடித்த போது பாலிவுட் வாய்ப்பு வந்தது. இருப்பினும் இங்கு நடித்ததால் பாலிவுட் என்னை கைவிட்டதோடு அங்கேயே செல் என்று கூறியது. தென்னிந்திய படங்களில் மீண்டும் நடிக்கும் ஆசை உள்ளது. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன்'' என்றார்.