‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

சந்தானம் ஹீரோவாக நடித்த பின் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை தந்த படம் ‛தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாம் பாகமும் ‛டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. நாயகியாக சுரபியும் முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.
இப்பட விழாவில் பேசிய நடிகர் சந்தானம், “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னார்கள். ஆனால் இந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தை முழுக்க முழுக்க சந்தானம் படமாக உருவாக்கி உள்ளோம். தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றன. அதேபோல இந்தப் படமும் மக்களின் மனங்களை கவரும் என நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேய் கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தை பிரேம் ஆனந்த் உருவாக்கியுள்ளார்” என்று சந்தானம் பேசினார்.