'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சந்தானம் ஹீரோவாக நடித்த பின் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை தந்த படம் ‛தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாம் பாகமும் ‛டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. நாயகியாக சுரபியும் முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.
இப்பட விழாவில் பேசிய நடிகர் சந்தானம், “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னார்கள். ஆனால் இந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தை முழுக்க முழுக்க சந்தானம் படமாக உருவாக்கி உள்ளோம். தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றன. அதேபோல இந்தப் படமும் மக்களின் மனங்களை கவரும் என நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேய் கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தை பிரேம் ஆனந்த் உருவாக்கியுள்ளார்” என்று சந்தானம் பேசினார்.