ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

சந்தானம் ஹீரோவாக நடித்த பின் அவருக்கு கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியை தந்த படம் ‛தில்லுக்கு துட்டு'. இந்த படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாம் பாகமும் ‛டிடி ரிட்டர்ன்ஸ்' என்ற பெயரில் உருவாகி உள்ளது. நாயகியாக சுரபியும் முக்கிய வேடங்களில் ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.
இப்பட விழாவில் பேசிய நடிகர் சந்தானம், “நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னார்கள். ஆனால் இந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தை முழுக்க முழுக்க சந்தானம் படமாக உருவாக்கி உள்ளோம். தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றன. அதேபோல இந்தப் படமும் மக்களின் மனங்களை கவரும் என நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேய் கதாபாத்திரமும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படத்தை பிரேம் ஆனந்த் உருவாக்கியுள்ளார்” என்று சந்தானம் பேசினார்.