ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் மிமிக்ரி கலைஞராக நுழைந்தவர் ராமர். அதன் பின் விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் காமெடியில் அசத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஸ்பூப் செய்தபோது இவர் பேசிய 'என்னம்மா இப்படி பன்றீங்களே மா' டயலாக் வேற லெவலில் ரீச்சானது. இதனையடுத்து இவரை என்னம்மா ராமர் என்றே பலரும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
ராமருக்கு கிருஷ்ணவேனி என்பவருடன் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். அவரின் சொந்த ஊர் மதுரை பக்கத்தில் இருக்கும் மேலூர். இதைத்தவிர ராமர் பற்றிய வேறு எந்த தகவலும் ரசிகர்களுக்கு பெரிதாக தெரியாது. இந்நிலையில், ராமர் ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மதுரை எம்.பி வெங்கடேசன், ராமருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, 'கொட்டாம்பட்டி ஒன்றிய கிராம ஊராட்சிகளில் நடைபெறும் ஆய்வின் போது 18 சுக்காம்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக (விஏஓ) பணியாற்றும் சின்னத்திரை கலைஞர் விஜய்டிவி புகழ் ராமர் அவர்களை சந்தித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளார். ராமரை இத்தனை நாள் வரை தொலைக்காட்சி நடிகர் மட்டுமே நினைத்து வந்த ரசிகர்களுக்கு அவர் பொறுப்புமிக்க ஒரு அரசு அதிகாரி என்ற தகவல் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.