பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நான்கு நாட்களிலேயே 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது.. இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்கள் தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கத் துவங்கி உள்ளது போல சிவகார்த்திகேயனும் தற்போது நேரடி தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். ஜதி ரத்னாலு திரைப்படம் புகழ் இயக்குனர் அனுதீப் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரிய ரிஷபோப்ஸ்கா நடிக்கிறார்.
தெலுங்கு படம் என்றாலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டில்தான் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக காரைக்குடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி தற்போது புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.