இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று நான்கு நாட்களிலேயே 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்துள்ளது.. இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள அயலான் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்கள் தற்போது நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கத் துவங்கி உள்ளது போல சிவகார்த்திகேயனும் தற்போது நேரடி தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். ஜதி ரத்னாலு திரைப்படம் புகழ் இயக்குனர் அனுதீப் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரிய ரிஷபோப்ஸ்கா நடிக்கிறார்.
தெலுங்கு படம் என்றாலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டில்தான் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னதாக காரைக்குடி பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்த நிலையில் கிட்டத்தட்ட 90% முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி தற்போது புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் நடிக்கும் படப்பிடிப்பு நடைபெறுவதை அறிந்து ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டதால் இந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.